முருகன் அல்லது அழகு திரு வி.க. குமரகுருபரர் உலகு குளிர எமது மதியில் ஒழுகு மமுத கிரணமே உருகு மடிய ரிதய நெகிழ உணர்வி லெழுந லுதயமே கலையு நிறைவு மறிவு முதிர முதிரு மதுர நறவமே கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே அலகில் புவன முடியும் வெளியில் அளியு மொளியி னிலயமே அறிவு ளறிவை யறிவு மவரும் அறிய வரிய பிரமமே மலையின் மகள்கண் மணியை யனைய மதலை வருக வருகவே வளமை தழுவு பரிதி புரியின் மருவு குமரன் வருகவே